இளம் பெண்..
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 17 வயதில் தான் பிரசவம் அடைந்த போது, தன்னுடைய அனுமதி இல்லாமல் க ருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும், அது எனக்கு 11 ஆண்டுகளுக்கு பின்னர் தான் தெரியவந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் 48 பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது அவர்களின் அனுமதி இல்லாமல் நடந்துள்ளதாகவும் கூறியது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது மக்கள் சமத்துவத்துக்கான ஆணையம் நடத்திய வி சாரணையின் போது தெரியவந்தது. அந்த ஆணையம், நோயாளிகளின் கோப்புகள் கா ணாமல் போனதால் தங்களுடைய விசாரணைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மருத்துவமனை அலுவலர்கள் இந்த வி சாரணைக்கு சரியாக ஒத்துழைப்பதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன் பின், மக்கள் உரிமை குழுக்கள் இதுபற்றி பிரச்சனை எழுப்பிதால், ஆணையத்தின் விசாரணை அதிகாரிகள் 15 மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளனர். இவற்றில் சில சம்பவங்கள் 2001-ல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைப் பற்றிய அறிக்கையில் தென்னாப்பிரிக்காவின் சுகாதாரத் துறை விரிவான பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இதுபற்றி விவாதிக்க ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆணையத்தை அத் துறையின் அமைச்சர் ஜ்வெலி மிக்கிஜே கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 48 பெண்களில் போங்கிலே மிசிபி என்பவரும் ஒருவர்.
இவர் பிரபல ஊடகமான பிபிசிக்கு இது குறித்து கூறுகையில், பிரசவத்திற்கு பிறகு நான் எழுந்து கீழே பார்த்த போது வயிற்றில் பெரிய பேண்டேஜ் ஒன்று போடப்பட்டிருந்தது.
இது குறித்து நான் கேட்டேன், ஆனால் அதிகம் விசாரிக்கவில்லை. ஏனெனில் அப்போது குழந்தை பிறந்திருந்தாள், அறுவை சிகிச்சை மூலம் ஏதேனும் செய்திருப்பார்கள் என்று நினைத்துவிட்டேன்.
குழந்தை பிறந்து ஐந்து நாட்கள் கழித்து ஆரோக்கியமான குழந்தையுடனும், வயிற்றில் பெரிய தழும்புடனும் நான் வீடு திரும்பினேன்.
எனக்கு அப்போது என்ன நடந்தது என்பது பற்றி அறிந்து கொள்ள 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுவும் நான் மீண்டும் கருத்தரிக்க முயற்சி செய்த போது அந்த உண்மை தெரியவந்தது.
முதல் குழந்தை பிறந்ததில் இருந்து நான் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததால், எனக்கு மாதவிலக்கு ஏற்படாததில் எந்த ச ந்தேகமும் எழவில்லை.
ஆனால் திருமணத்துக்கு உறுதியாகி, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி நான் மருத்துவரிடம் சென்றேன்.
என்னைப் பரிசோதித்த அவர், என்னை உட்கார வைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்துவிட்டு, எனக்கு கருப்பை இல்லை என்ற தகவலைக் கூறினார்.
அது எனக்கு பே ரிடியாகவும், அ திர்ச்சியாகவும் இருந்தது. இது எப்படி நடந்தது? எனக்கு பிரசவம் நடந்த போது தான் அது நடந்திருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.
எனக்கு ஒரு குழந்தை கட்டாயமாக வேண்டும். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததை நான் பார்த்தபோது, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எனக்கு கொ டூரமான செயலைச் செய்திருக்கிறார்கள்.
பத்திரிகைகளிடம் சென்றேன். பிறகு சுகாதார அமைச்சகத்தை நாடினேன். கடைசியில் அந்த மருத்துவமனைக்குச் சென்று, அன்றைக்கு பிரசவம் பார்த்த மருத்துவரிடம் சென்றேன்.
அவர் மன்னிப்பு கேட்கவில்லை. என்னுடைய உ யிரைக் கா ப்பாற்றுவதற்காக கருத்தடை சிகிச்சை செய்ததாக கூறினார்.
ஆனால் அவர் என்னை எதில் இருந்து என்னைக் கா ப்பாற்ற அப்படி செய்தார் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. மருத்துவமனையில் எந்த பதிவேடுகளும் இல்லை.
பாதிக்கப்பட்டிருப்பது நான் மட்டுமல்ல. விசாரணை நடத்தியதில் வேறு 47 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது.
சிலருக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்ததால் அப்படி செய்ததாகச் சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படியில்லை. எனக்கு ஏன் அப்படி செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ஒப்புதல் படிவத்தில் நான் கையெழுத்திட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். நான் கையெழுத்திடவில்லை. அந்த சமயத்தில் நான் மைனர். எனவே அப்படி நான் கையெழுத்து போட்டிருக்க முடியாது.
பிரசவத்தின் போது என்னுடன் இருந்த எனது தாயார் அந்தப் படிவத்தில் கையெழுத்து போட்டிருப்பதாக, பிறகு மருத்துவர் கூறினார். தாம் அப்படி கையெழுத்திடவில்லை என்று என் தாயார் கூறினார்.
இதனால், நான் திருமணம் செய்து கொள்ள இருந்தவரை விட்டுப் பிரிந்தேன். அவர் குழந்தை வேண்டும் என்று விரும்பினார். என்னால் அவருக்கு அதைத் தர முடியாது என்பதால் பிரிய நேரிட்டது.
மருத்துவரை நான் சந்தித்தபோது, எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். கட்டாயமாக எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றும் கூறினேன். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததை நான் பார்க்கும் போது, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
என் மகள் தனக்கு ஓர் உடன்பிறப்பு வேண்டும் என்று விரும்புகிறாள். சாலையில் நாங்கள் செல்லும்போது குழந்தைகளைப் பார்க்கும்போது, என்னிடம் அவள் கேட்கிறாள்.
எனக்கு இன்னும் கரு முட்டைகள் உற்பத்தியாகின்றன. எனவே நான் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான செலவை மருத்துவமனை செலுத்த வேண்டும்.
இதற்குக் காரணமான யாராவது பொறுப்பேற்கும்படி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மருத்துவர்கள் தொடர்ந்து இவ்வாறு செய்ய நாம் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் பெண்களின் உ ரிமைகள் மீறப்படுகின்றன.
தாங்கள் க ண்காணிப்புக்கு உட்பட்டவர்கள் என்பதை மருத்துவர்கள் அறிந்திட வேண்டும். நாங்கள் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
பிறகு எனக்கு இவ்வாறு செய்த மருத்துவரிடம் சென்று, மன்னிப்பு கேட்க சொன்னேன்.
அவர்கள் இந்த விஷயத்தைக் கையாண்ட விதத்தைப் பார்த்தால், ஒரு விரலை அகற்றியதைப் போல தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய பெண் தன்மையை அவர்கள் தி ருடிவிட்டார்கள்.
அதை ஒருபோதும் என்னால் மறந்துவிட முடியாது. அந்தத் தழும்பு எப்போதும் எனக்கு நினைவில் இருந்துகொண்டே இருக்கும் என்று வே தனையுடன் கூறி முடித்தார்.