சுவரொட்டிகள்..

பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்னி தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் சைவ சமய மதவாத ரீதியான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகள் என்பவற்றில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிவசேனை என்ற அமைப்பு இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ளது.

“ தமிழ் தேசியம் காக்க சைவ வேட்பாளருக்கு வாக்களிப்பீர் சைவ மக்களே” என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளால் தமிழ் மக்கள் மத்தியில் மத ரீதியான பி ரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




