கோட்ட மட்ட..

வவுனியா தெற்கு தமிழ் கோட்ட மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.மரியநாயகம் தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்றையதினம் (05.03.2020) மதியம் 3.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.

பிரதம , சிறப்பு , கௌரவ விருந்தனர்கள் மைதான வாயிலில் மாலை அணிவித்து சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர்.

அதன் பின்னர் மங்கள விளக்கேற்றல் , மௌன அஞ்சலி, கொடியேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியது.

பல சாதனைகளை தனதாக்கி கொண்ட வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவி ஆகியோர் இணைந்து ஒலிம்பிக்தீபத்தினை ஏற்றி வைத்துடன்,

விளையாட்டு நிகழ்வுகளை பிரதம விருந்தினர் வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அணிநடை வகுப்பு, ஓட்டம், அஞ்சல் ஓட்டம், இடைவேளை கண்காட்சி என பல இடம்பெற்றிருந்தன.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் , கௌரவ விருந்தினராக நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் மற்றும் விருந்தினராக வவுனியா பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பணிமனை அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உடற்கல்வி ஆசிரியர்களான ஜெ.சுதாத்தரன், அ.ஆனந்தகுமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடமாகாணப் பாடசாலைகள் தரப்படுத்தலில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 8ம் இடத்தினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் வவுனியா தெற்கு கல்விவலயத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






