வவுனியாவை உள்ளடக்கிய வன்னி தொகுதியில் முடிவிற்கு வந்துள்ள கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவுகள்!!

598

வேட்பாளர் தெரிவுகள்..

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழரசு கட்சியில் சார்ல்ஸ் நிர்மலநாதன், சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும்,

தமிழீழ விடுதலை இயக்கத்தில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், செந்தில்நாதன் மயூரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தையா சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவதாக அறியமுடிகிறது.