கொரோனா தொற்று சந்தேக நபர்கள்..

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கையாக 260க்கு மேற்பட்டவர்கள் 6 பேரூந்துகளில் வவுனியாவிற்கு இன்று (13.03.2020) மாலை 6.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பா துகாப்புடன் நான்கு பெரிய பேருந்துகளிலும் இரண்டு சிறிய பேரூந்துகளிலும் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் வவுனியா பம்மைமடு மற்றும் பூவரசங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் பூவரசங்குளம் கடற்படை முகாமிற்கு பெண்களும் பம்மைமடு இராணுவ முகாமில் ஆண்களும் எதிர்வரும் 14 நாட்களுக்கு அங்கு தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தெரிவித்தார்.

தென் கொாியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 166 போ் பற்றிகலோ கம்பஸில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





