இலங்கையில் சுமார் 80 புகையிரத சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்!!

716

புகையிரத சேவைகள்

இலங்கையில் சுமார் 80 தொடருந்து சேவைகள் இன்று முதல் 19ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறுகிய தூர தொடருந்துகளே இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நீண்ட தூர தொடருந்துகள் வழமைப்போல சேவையில் ஈடுபடுகின்றன. விடுமுறை நீடிக்கப்பட்டால் இந்த தொடருந்துகள் 23ஆம் திகதிவரை இடைநிறுத்தப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச (அத்தியாவசிய சேவை தவிர்ந்த) மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.