இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு!!

389

கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்தார். இன்று மட்டும் 7 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் 2258 பல்வேறு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.