வவுனியா மாவட்ட செயலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்!!

729

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (18.03.2020) வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தது.

இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதன்மை வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ஏனைய வேட்பாளர்கள வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

வன்னித் தேர்தல் தொகுதியில் செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வினோநோகராதலிங்கம், ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், க.சிவலிங்கம், செ.மயூரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.