அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு!!

709

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு..

இலங்கையில் கொ ரோ னா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடைமுறை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.