சீனர்களே உலகத்திற்கு கொரோனாவை கொண்டு வந்தனர் : தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கும் இலங்கையர்!!

501

இலங்கைக்கு முதலில் கொரோனா வைரஸை முதலில் கொண்டு வந்தவர் ஒரு சீனப் பெண் என தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்படடுள்ள இத்தாலியில் தொழில் புரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனர்களே உலகத்திற்கு கொரோனா வைரஸை கொண்டு வந்தனர் எனவும் அந்த நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனர்கள் கொண்டு வந்த கொரோனா வைரசுக்காக இத்தாலியில் தொழில் புரியும் இலங்கையர்களை திட்ட வேண்டாம் எனவும் அந்த நபர் எச்சரித்துள்ளார்.

இத்தாலியில் இருக்கும் இலங்கையர்களுககு தமது தாய் நாட்டுக்கு வரும் உரிமை இருப்பதாகவும் அதனை எவராலும் இல்லாமல் செய்ய முடியாது எனவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.