வவுனியாவில் வீதிகளில் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவளித்த ஊடகவியலாளர்கள்!!

1016

உணவின்றி தவித்த மக்களுக்கு..

கொரனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியதன் காரணமாக வீதிகளில் யாசகர்கள் உணவின்றி தவிர்த்தனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து இலாப நோக்கற்ற நிறுவனமான தமிழ் விருட்சம் அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளிக்கினங்க வேப்பங்குளம் இந்து அன்பகத்தினால் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வீதியின் நின்ற யாசகர்களை வீதி வீதியாக தேடிச்சென்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர்களுடன் இணைந்து தமிழ் விருட்சம் அமைப்பினர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்து மகிழ்வடைந்தனர்.

நாட்டில் ஊரடங்கு சட்டம் பிரயோகிக்கப்பட்டு கட்டுப்பாடான நிலைமை காணப்படுகின்ற போதிலும் ஊடகவியலாளர்களின் இச் செயற்பாடு பொதுமக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.