ஊரடங்கு சட்டத்தின் போது 790 பேர் கைது!!

539

காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளவேளையில் அதனை மீறினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இதுவரை 790 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது உந்துருளிகள் உட்பட்ட 156 வாகனங்கள் மூன்று முச்சக்கர வண்டிகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.