முகக்கவசங்கள் அணியாதோர் திருப்பியனுப்பப்படும் நிலை!!

405

முகக்கவசங்கள் அணியாதோரை சில வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஏனைய இடங்களில் இருந்து திருப்பியனுப்பிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும் இது தவறான நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்னமும் முகக்கவசங்களை அணிவது அத்தியாவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னமும் இது சமூக பரவல் நோயாக மாறவில்லை எனவே முகக்கவசங்களை அணியவேண்டுமாக இருந்தால் அது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே வர்த்தக நிலையங்கள் முகக்கவசங்களை அணியவில்லை என்பதற்காக பொதுமக்களை திருப்பியனுப்ப கூடாது என்றும் அதற்கு பதிலாக அவை சமூக இடைவெளி என்ற ஒரு மீற்றருக்கு ஒருவர் என்ற நடவடிக்கையை வலியுறுத்தலாம் என்றும் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.