கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதம் : நட்ட ஈட்டை கோரும் அமெரிக்கா!!

402

சீனாவுக்கு எதிராக அமரிக்காவின் முக்கிய சட்டத்தரணி ஒருவர் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சீனாவிடம் இருந்து 20 ரில்லியன் டொலர்களை அவர் நட்டஈடாக கோரியுள்ளார்.

இதேவேளை இலங்கை போன்ற நாடுகளும் சீனாவுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா சட்டத்தரணி கேட்டுள்ளார்.

லாரி லாய்மான் என்ற இந்த சட்டத்தரணி முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் றேகனின நிர்வாகத்தின்கீழ் அரச சட்டவாதியாக இருந்தவராவார்.

இந்தநிலையில் தாம் இலங்கையர்கள் உட்பட்டவர்களுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக செயற்பட எதிர்பார்ப்பதாக லாய்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது. போரின் உயிரியல் ஆயுதமாகவே அதனை சீனா உருவாக்கியது.

இந்தநிலையில் சீனாவின் இந்த உயிரியல் ஆயுதம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிரானது. அத்துடன் இதனை வுஹானில் உள்ள நச்சு உயிரியல் தொடர்பான படிப்பியல் நிறுவனத்தில் இருந்து பொறுப்பற்ற வகையில் வெளியில் பரப்பியதன் மூலம் அங்குள்ள பணியாளர்கள் சமூகத்தில் பரவுவதை தடுக்க தவறிவிட்டனர்.

அதேநேரம் அமெரிக்காவில் பெருகவும் வழிவகுத்தனர் என்றும் அமெரிக்க சட்டத்தரணி குற்றம சுமத்தியுள்ளனர்.