19 வயது இளைஞர் உயிரிழப்பு : கொரோனா தொற்றியது தெரியாமலே இறந்த பரிதாபம்!!

637

19 வயது இளைஞர்

ஆரோக்கியமான இளைஞரொருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இறந்த பின்னரே தெரியவந்துள்ளதாகவும், முன்னரே கண்டறியப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு இத்தாலியின் நிரேடோ நகரை சேர்ந்த 19 வயதான லுகா டி. நிக்கோலா கடந்த 24ஆம் திகதி வடக்கு லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அந்த இளைஞன் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்துள்ளதுடன் அவருக்கு சளி இருக்கவில்லை என இத்தாலிய பத்திரிக்கை லா ரிப்பப்ளிகா தெரிவித்துள்ளது.

இது குறித்து மிடில்செக்ஸ் மருத்துமனையில் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், 19 வயதான இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தது சோகமானது. இறந்த பின்னர் பரிசோதித்த போதே அவருக்கு கொரோனா தொற்றியுள்ளது கண்டறியப்பட்டது.

இந்த இளைஞன் சிகிச்சைக்காக இத்தாலிக்கு திரும்பி இருந்தால், நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என நிரேடோ நகர துணை மேயர் மரியா ஏஞ்சலா லெலி குறிப்பிட்டுள்ளார்.