கொரோனாவால் அபாயத்தில் சிக்கவுள்ள ஏழை நாடுகள் : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!!

1456

கொரோனாவால்..

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா சபையின் துணைத்தலைவர் அமினா முகமது இது தொடர்பில் தெரிவிக்கையில்,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்தும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நின்றுள்ளன.

குறிப்பாக ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் வளர்ச்சியடைந்த நாடுகள் திணறி வருகின்றன.

இதனால் அவை ஏழை நாடுகளுக்கு எப்படி உதவும் என தெரியவில்லை. கொரோனாவால் ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நீடித்த திட்டம் தேவை.

காலநிலை மாற்றத்தை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதிலும் ஏற்ற தாழ்வுகளை சரி செய்வதிலும் வறுமையை ஒழிப்பதிலும் உலகம் ஏற்கனவே பின்தங்கியுள்ளது.

இப்போது இதில் கொரோனா தொற்றும் சேர்ந்துள்ளது. இதிலிருந்து உலகை மீட்டு ஏழை நாடுகள் மற்றும் பூமியை காப்பாற்ற நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.