கிரீன்காட்..

அமெரிக்காவில் குடியேறுவதற்கான கிரீன்காட் முறை 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொழில்களை இழந்த அமெரிக்கர்களை பாதுகாக்கும் வகையில் இந்த குடிவரவு கட்டுப்பாடு அறிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக போரை மேற்கொண்டிருந்த நிலையிலேயே கொரொனா வைரஸ் பரவல் ஏற்பட்டது. எனவே இது தொடர்பில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அதிகமாக பேச வேண்டியிருப்பதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரிலேயே வைரஸ் பரவல் ஆரம்பித்ததாக அமெரிக்க புலனாய்வு துறையினர் நம்புகின்றனர். எனினும் புலனாய்வுத்தகவல் என்பதால் அது தொடர்பில் கலந்துரையாட விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
![]()
பிரித்தானியாவில் கடந்த 20வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் தேசிய புள்ளிவிபர அலுவலக தகவல்படி கடந்த 10ஆம் திகதியின் பின்னர் 18500 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதில் மூன்றாவது காரணியாகவே கொரொனாவைரஸ் தாக்கம் உள்ளது. ஏனைய காரணிகள் காரணமாகவே மரணங்கள் அதிகரித்துள்ளன. நாட்டில் முடக்கல் நிலை அறிமுகப்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட மறைமுகமான சுகாதார தாக்கங்களே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிபுணர்களின் கொரோனா வைரஸ் காரணமாகவே இந்த மரணங்கள் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர்.




