கொரோனா தொற்றினால்..

ஈக்குவடோர் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் திரும்பியிருக்கிறார்.

ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த மாதம் அவர் இறந்து விட்டார் என மருத்துவமனையிலிருந்து தெரிவிக்கப்பட்டது. அவரது அஸ்தி கூறி ஒரு பெட்டியையும் உறவினர்களிடம் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

ஆனால் மூன்று வாரமாக மருத்துவமனையில் கோமாவில் இருந்த மரூரி வியாழக்கிழமையன்று கோமாவிலிருந்து மீண்டு சுய நினைவுக்குத் திரும்பியுள்ளார்.

மருத்துவர்களிடம் தன்னுடைய சகோதரியை அழைக்குமாறு கேட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அஸ்தி யாருடையது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் ஏற்பட்ட குழப்பத்திற்காக மருத்துவமனை அந்த குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஈக்குவடாரில் இதுவரை 22,000க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 600 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




