கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் ஆணாக மாறிய வினோதம் நடந்துள்ளது.
தென்கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்தவர் நடாலியா(38). இவர் 2 லட்சத்து 26 ஆயிரத்து 530 கடன் வாங்கி வைத்துள்ளார், கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்தவர் வினோதமான ஐடியாவை யோசித்துள்ளார்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிவிட்டார்.
ஆணாக மாறிய நடாலியாவின் தற்போதைய பெயர் ஆன்ட்ரியன். இந்த பெயரில் புதிய பாஸ்போர்ட்டை பெற்று மேலும் பலரிடம் கடன் வேறு வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நடாலியாவை தேடிச் சென்ற பொலிசாருக்கு அப்படி ஒரு பெண்ணே இல்லை ஆன்ட்ரியன் என்பவர் தான் இருக்கிறார் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.