வவுனியாவில் குளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்ட மூவர் முச்சக்கர வண்டியுடன் கைது!!

766

மூவர் முச்சக்கர வண்டியுடன் கைது..

குளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்ட மூவரை முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரும் மகாறம்பைக்குளம் பகுதியில் வைத்து இன்று (29.05.2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, உக்கிளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற மூவர் வீடு வீடாகச் சென்று குளோரின் விற்பனை செய்ததுடன், வீட்டில் உள்ளவர்கள் உள்ளே சென்ற சமயத்தில் வீடு ஒன்றில் இருந்து தேங்காய் எண்ணெய் கலன் ஒன்றினை திருடிச் சென்றதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூவரை முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளதுடன், தேங்காய் எண்ணெய் கலனையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபர்கள் 10 கிலோ குளோரின் பையினுள் குளோரினுடன் கோதுமை மாவினையும் கலந்து அப்பகுதியில் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.