வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் மீட்பு!!

545

மோட்டார் செல்கள்..

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணியிலிருந்து வெடிபொருட்களை ஈச்சங்குளம் பொலிசார் இன்றைய தினம் மீட்டுள்ளனர். ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.

பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து வீட்டு உரிமையாளர் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொலிசாருக்கு தெரியபடுத்தபட்ட பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த பகுதியை சோதனை செய்து பார்த்தபோது இரண்டு மோட்டார் செல்களை அவதானித்துள்ளனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.