வவுனியா வேப்பங்குளத்தில் ம து போ தையில் வாகனம் செலுத்தியவரை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!!

1439

வேப்பங்குளத்தில்..

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் ம து போ தையில் வாகனத்தினை செலுத்தியவரினால் அவ்விடத்தில் நிலவிய பதற்ற நிலையினையடுத்து அக்கிராம இளைஞர்கள் வாகனத்தின் சாரதியினை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இன்று (06.06.2020) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேப்பங்குளம் 7ம் ஒழுங்கையில் வீதியில் நின்ற பொதுமக்களுக்கு மோதும் வகையில் சென்ற பட்டா ரக வாகனத்தினை அக்கிராம இளைஞர்கள் மடக்கிப்பிடித்தனர்.

இதன் போது பட்டா ரக வாகனத்தின் சாரதி அதிக ம து போ தையில் இருந்துள்ளார். அதன் பின்னர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அவ் இளைஞர்கள் சம்பவத்தினை தெரியப்படுத்தியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பட்டா வாகனத்தினை கைப்பற்றியதுடன்,

சாரதி ம து போ தையில் காணப்பட்டதினை பொலிஸார் உறுதிப்படுத்தி சாரதியினை கைது செய்தனர். அக்கிராம இளைஞர்களின் இச் செயற்பாட்டின் காரணமாக இடம்பெறவிருந்த ஆ பத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.