வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 4 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று!!

936

கொரோனா தொற்று..

வவுனியா, பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 04 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த 22 ஆம் திகதி இரவு அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 276 பேர் வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் போது பெரியகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 கடற்படை வீரர்களுக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் மூவருக்கு நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கொழும்பு ஐடிஎச் மருதுவமனைக்கும், மேலும் ஒருவருக்கு இன்று காலை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.