வவுனியாவில் மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

1748

மரத்திலிருந்து தவறி விழுந்து..

வவுனியா – மடுகந்த பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ஆடுகளுக்கு குழை பறிப்பதற்காக மடுகந்த பகுதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறிய நிலையில் தவறி விழுந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அன்ரன் அருள்நாதன் (வயது 51) என்ற நபரே உ யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. உயிரிழந்த நபரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மடுகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.