வவுனியாவில் இளைஞரொருவர் ம ர்மமான முறையில் உயிரிழப்பு!!

1864


இளைஞரொருவர்..



வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் ம ர்மமான முறையில் உ யிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்றைய தினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்டு வீட்டிலேயே இ றந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சடலத்தை பார்வையிட்ட வவுனியா திடீர் மரண விசாரனை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.




உடற்கூற்று பரிசோதனையிலும் இளைஞர் உ யிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில்,மேலதிக ப ரிசோ தனைகளுக்காக அவரது மாதிரிகள் பெறப்பட்ட பின்னர் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தில் உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த சந்தியோகு அன்ரணி (வயது35) என்ற இளைஞரே ம ரணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.