வவுனியாவில் பேரூந்து நிலையங்களை சுத்தம் செய்த விசேட அதிரடிப்படையினர்!!

715

விசேட அதிரடிப்படையினர்..

வவுனியாவில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியான பேரூந்து நிலையங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் வவுனியா மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் இன்று (09.06.2020) காலை ஈடுபட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரினால் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.