வவுனியாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் : சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது!!

1825

பெண் ஒருவர் கைது..

வவுனியா றம்பைவெட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியநிலையில் நேற்று (08.06.2020) காலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணுக்கும், அயலவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பொலிசாரின் தகவலுக்கமைய, மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் நிமித்தம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் அதேபகுதியை சேர்ந்தபெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர்.

முந்திய செய்தி : வவுனியாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் அனுமதி!!

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று(08.06.2020 காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம், ரம்பைவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வா ய்தகராறு ஏற்பட்டு அது கைக லப்பாக மாறியுள்ளது.

இதன்போது இளம் குடும்ப பெ ண் ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே தீயில் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு தீ வைத்தது யார் என்பது தொடர்பில் மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.