வவுனியாவில் இராணுவத்தினர் விசேட ரோந்து நடவடிக்கை!!

855

விசேட ரோந்து நடவடிக்கை..

வவுனியா நகரப்பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கில்களில் இன்று (12.06.2020) காலை விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த மூன்று மாதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச்சட்டம் தற்போது தளர்த்தப்பட்டு நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில்,

வவுனியா நகரின் முக்கிய இடங்களில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கில்களில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அவதானிக்ககூடியதாகவுள்ளது.

குறிப்பாக வவுனியா பூங்கா வீதி, வைரவப்புளியங்குளம் வீதி, புகையிரத நிலைய வீதி, மன்னார் வீதி, வவுனியா நகர் போன்ற பகுதிகளில் இராணுவத்தினரின் இவ் விசேட ரோந்து நடவடிக்கை இடம்பெற்றிருந்தன.