வவுனியா புகையிரத நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கைது!!

1607

புகையிரத நிலையத்தில்..

வவுனியா புகையிரத நிலையத்தில் குழம்பம் விளைவித்து கடமையில் இருந்து புகையிரத நிலைய அதிபருக்கு அ ச்சுறு த்தல் விடுத்ததாக இருவர் நேற்று (14.06.2020 இரவு வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புகையிரத நிலையத்திற்கு நேற்று மாலை சென்ற இருவர் அங்கு கடமையில் இருந்த புகையிரத நிலைய அதிபருடன் முரண்பட்டு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி குழப்பம் விளைவித்ததாகவும்,

அ ச்சுறுத் தல் விடுத்ததாகவும், இதன் காரணமாக கடமையில் இருந்த புகையிரத நிலைய அதிபர் ம ன உ ளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் புகையிரத திணைக்கள தலைமையகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலும் தொலைபேசி மூலம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபர்களை கைது செய்யாது விடின் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப் போவதாக புகையிரத நிலைய ஊழியர்கள் தெரிவித்த நிலையில் விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் குறித்த இருவரையும் இன்று (15.06.2020) நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.