வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு : பெண் உட்பட ஐவர் வைத்தியசாலையில்!!

2686


வீடு புகுந்து..



வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஐந்துபேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



நேற்று (14.06.2020 இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை வா ளால் வெ ட்டியதுடன், வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் சே தப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.




குறித்த சம்பவத்தில் பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.