வவுனியாவில் வாளுடன் சென்றவர்கள் அட்டகாசம் : மோட்டார் சைக்கிள் தீக்கிரை!!

1849

கூமாங்குளம் பகுதியில்..

வவுனியா கூமாங்குளம் பகுதியில் வாள்களுடன் சென்ற நபர்களால் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், நாய்க்குட்டிகளும் க டத்திச் செல்லப்பட்டுளது.

இன்றயதினம்(18.06.2020) அதிகாலை கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுளைந்த சிலர் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளதுடன்,

தொலைக்காட்சிப் பெட்டி, வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்துவிட்டு, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்க்குட்டிகளையும் களவாடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.