வவுனியா வேலன்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் டுபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட 168 பேர் தங்கவைப்பு!!

929

வேலன்குளம் தனிமைப்படுத்தல் முகாமில்..

டுபாய் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 168 பேர் வவுனியா, வேலன்குளம் விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இன்று(18.06.2020 பிற்பகல் கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து வேலை வாய்ப்புக்காக டுபாய் நாட்டிற்கு சென்று தங்கியிருந்தவர்களில் 290 பேர் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ்சின் விசேட விமானம் மூலம் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 168 பேர் கொரோனா பரிசோதனைக்காக வவுனியா, வேலன்குளம் விமானப்படைத் தளத்தில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு 10 பேரூந்துகளில் இராணுவ பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கவுள்ளதுடன், பீசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.