வவுனியாவில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடல்!!

1046

தேர்தல் ஆணையாளர்..

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து வடக்கு மாகாண அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (21.06.2020) மாலை 4 மணிக்கு குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாராளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றல், தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள், தபால் மூல வாக்களிப்புக்கான ஓழுங்குகள் மற்றும்,

தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் ஆகியோர் கேட்டறிந்து கொண்டதுடன், ஆலோசனைகளையும் வழங்கினர்.

இதில் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்கள், தேர்தல் திணைக்கள அதிகாரிகள், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.