16 வயது சிறுமியின் மீது ஆசைப்பட்டு 66 வயது நபர் எழுதிய கடிதம் : அதில் இருந்த வார்த்தைளால் அதிர்ச்சியடைந்த தாய்!!

920

66 வயது நபர்..

தமிழகத்தில் 16 வயது சிறுமிக்கு, 66 வயது நபர் காதல் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசித்து வருபவர் முகமது பீர் பாஷா(66), இதே பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார்.

சிறுமியை அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் முகமது தாத்தாவுக்கு வேறு சிந்தனை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக உடனடியாக அந்த சிறுமிக்கு கடிதம் எழுதினார்.

அதில், எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கு ஓகே வா என்று நேரடியாகவே அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி, உடனடியாக குறித்த கடிதத்தை தன்னிடம் தாயிடம் கொடுக்க,

அவரது அம்மாவோ அதைக் கண்டு அ திர்ச்சியடைந்து, உடனடியாக மொத்த சொந்தக்காரர்களையும் வரவழைத்து கடிதத்தை காட்டியுள்ளார். இதனால் ஆ த்திரமடைந்த உறவினர்கள், முகமது தாத்தாவை சந்தித்து கண்டித்துள்ளனர்.

ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாமல், மீண்டும் சிறுமியை சந்தித்து, நான் தந்த கடிதத்திற்கு என்ன பதில்? என்று கேட்டு மி ரட்டி உள்ளார். அவர் மி ரட்டிவிட்டதால் ப யந்துபோன சிறுமி வீட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டார்.

முகமதுக்காக வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்திருக்கிறார். இப்படியே விட்டால் சரிப்படாது என்று நினைத்த சி றுமியின் பெற்றோர், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை பொலிசார் விசாரித்ததில், சிறுமியை மி ரட்டியது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், முகமது தாத்தாவை சிறையில் அடைத்துள்ளனர்.