வவுனியாவில் சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற 8 பேர் கைது!!

893

சட்டவிரோதமாக..

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லபட்ட 30 மாடுகளை பொலிசார் இன்று (26.06.2020) மீட்டுள்ளனர்.

நொச்சிகுளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவ்வீதியால் வருகை தந்த நான்கு வாகனங்களை வழிமறித்து சோ தனை செய்தனர்.

இதன் போது குறித்த வாகனங்களில் 30 மாடுகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தில் பயணித்த அநுராதபுரத்தை சேர்ந்த 8 பேரை கைது செய்த பொலிசார் வாகனங்களையும், மாடுகளையும் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

கைப்பற்றப்பட்ட மாடுகள் மருதோடை பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி எடுத்து செல்லப்படவிருந்ததுடன், அவற்றை எடுத்து செல்வதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை என்று தெரிவித்த பொலிசார்,

கைப்பற்றப்பட்ட மாடுகள் அதன் உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதா? அல்லது களவாடப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

இக்கைது நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர் அத்தநாயக்கவின் வழிகாட்டலில் சாஜன்காளான ஜெயசூரிய (34177) மற்றும் ரத்நாயக்க (49720) கான்ஸ்டபிள்களான செனாரத்ன (67103) குமார, பொலிஸ் சாரதியான ரஞ்சித் (384570) ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.