கணவனை பழிவாங்க பேஸ்புக்கில் மனைவி செய்த மோசமான செயல்!!

8807


மனைவி செய்த மோசமான செயல்..



தமிழகத்தில் கணவனை பழிவாங்குவதற்காக மனைவி, சமூக வலைத்தளங்களில் அவரின் ஆ பாச புகைப்படங்களை பதிவிட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருச்சி மாவட்டம் பாலக்கரை காஜியார் தெருவைச் சேர்ந்தவர் மோகன் ஜெய்கணேஷ். இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவருக்கும்,




தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வரும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தாட்சாயினிக்கும் மோகன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில், தாட்சாயினி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இருப்பினும் அடிக்கடி போன் செய்து, கணவரிடம் பி ரச்சனை செய்து வந்துள்ளார்.

மோகன் ஜெய்கணேஷ் தன் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் பேஸ்புக்கில் எழுதுவதை வழக்கமாக கொண்டவர் என்பதால், குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்தும் அதில் பதிவு செய்து வந்திருக்கிறார்.


மேலும் பிரிந்த மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

பேஸ்புக் பதிவை பார்த்து கோ பமடைந்த மனைவி தாட்சாயினி அந்தப் படங்களை நீக்குமாறு கூறியுள்ளார் ஆனால் மோகன் ஜெய்கணேஷ், தற்போது வரை நீ என் மனைவிதான், அதனால் உன்னுடன் இருக்கும் படத்தை எனது பேஸ்புக்கில் பதிவு செய்வதில் என்ன பி ரச்னை என்று கேட்டு, படத்தை நீக்காமல் இருந்துள்ளார்.

இதனால் ஆ த்திரமடைந்த, தாட்சாயினி தனது புகைப்படத்தை பதிவிடும் அதே பேஸ்புக்கில், கணவரை அ சிங்கப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

இதற்காக தனது கல்லூரி கால நண்பரான கட்டுமான தொழில் செய்யும் தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகரைச் சேர்ந்த 28 வயதான கிருபாகரன் உதவியை தாட்சாயினி நாடியுள்ளார்.

இருவரும் திட்டமிட்டு பேராசிரியாரான மோகன் ஜெய்கணேசின் பேஸ்புக் பக்கத்தில் ஆ பாச படங்களை பதிவிட முடிவு செய்துள்ளனர். கணவர் மோகன் ஜெய்கணேசின் பேஸ்புக்கின் பாஸ்வேர்டு தாட்சாயினிக்கும் தெரியும் என்பதால் இவர்களது திட்டம் எளிமையாகிவிட்டது.

கணவரின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்த தாட்சாயினி, அவர் பதிவிட்டதுபோல சில பெண்களின் ஆ பாசப் படங்களை மார்பிங் செய்து பதிவேற்றியுள்ளனர். இதைப்பார்த்து அ திர்ச்சி அடைந்த மோகன ஜெய்கணேஷ் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணையில், தாட்சாயினியும், கிருபாகரனும் திட்டமிட்டு ஆ பாச மார்பிங் புகைப்படங்களை பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

மோ சடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் பொலிசர் வழக்குப்பதிவு செய்தனர் தாட்சாயினியின் நண்பர் கிருபாகரனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தாட்சாயினியை தே டி வருகின்றனர்.