வவுனியாவில் சஜித் மற்றும் ரிசாட் பதியுதீன் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடும் சோதனை!!

1064

கடும் சோதனை..

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் சஜித் பிரேமதாச மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பில் விசேட அதிரடிப்படையினர் கடும் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் குறித்த மக்கள் சந்திப்பு இன்று (01.07.2020) காலை இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் வெ டிபொருள் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் மண்டபத்தில் வாயிலில் ஊடகவியலாளர்களில் கமராக்கள், ஒலிவாங்கிகள் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு செல்லும் அனைவரும் உடல் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

மண்டப வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிள் உட்பட்ட வாகனங்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மண்டபத்திலிருந்து 100 மீற்றர் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி நடந்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.