வவுனியாவில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் மா ணவி ஒருவரின் சடலம் மீட்பு!!

3822

சிறுவர் இல்லத்தில்..

வவுனியாவில் சிறுவர் இல்லமொன்றில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் இல்லத்தினால் இன்று(05.07.2020) மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது குறித்த மா ணவியை நீண்ட நேரம் கா ணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தே டியுள்ளனர்.

இதன்போது விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள குளியலறையில் தூ க்கில் தொ ங்கிய நி லையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது ராஜி செல்வராணி என்ற 17 வயது மா ணவியே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்று வருவதுடன்,

இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது இவர் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக குறித்த இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.