புகையிரத போக்குவரத்து ஸ்தம்பிதம்..

யாழ்ப்பாணத்திலிருந்து காலை 3.45 மணியளவில் கொழும்பு நோக்கி பயணத்தினை ஆரம்பித்த கடுகதி புகையிரம் இன்று (08.07.2020) அதிகாலை 5.50 மணியளவில் வவுனியாவின் எல்லைப்பகுதியினை அண்மித்த,

ஈரப்பெரியகுளம் பகுதியில் புகையிரதம் கடவையை விட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

அதன் பின்னர் தடம் புரண்ட பெட்டிகளை ஈரப்பெரியகுளம் புகையிரத பாதையில் விட்டு விட்டு ஏனைய எஞ்சிய பெட்டிகளுடன் ஒரு மணிநேர தாமதத்தின் பின்னர் 6.55 மணியளவில் கடுகதி புகையிரதம் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.

தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் புகையிரத நிலைய திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளமையினால் வடக்கிற்கான புகையிரத போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து காலை 5.30 மணிக்கும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து காலை 6.20 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த ஆரம்பித்த புகையிரதங்கள் வவுனியா புகையிரத நிலையத்தில் இரண்டு மணிநேரமாக தரித்து நிற்கின்றன.

இதன் காரணமாக பயணிகள் வவுனியா புகையிரத நிலையத்தில் அமர்ந்து இருப்பதினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் பணிகள் நிறைவடைய மதியம் இன்று 12.30 மணி வரை ஆகலாம் என வவுனியா புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து புறப்பட்ட புகையிரதம் தடம்புரண்டது : வடபகுதிக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று(08.07.2020) காலை ரயில் கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை 5.50 வவுனியா ரயில் நியைத்திலிருந்து கடுகதி ரயில் ஒன்று கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டபோது 6.15 மணியளவில் பூனாவை பகுதியில் ரயில் கடவையை விட்டு தடம் புரண்டு இரண்டு கிலோ மீற்றர் தூரம் ரயில் பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

எனினும் ரயிலில் பயணித்த பயணிகள் உட்பட புகையிரதத்திற்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை இச்சம்பவத்தினால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தடம்புரண்ட பெட்டிகளை புனாவை ரயில் கடவையில் விட்டு விட்டு ஏனைய எஞ்சிய பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் தாமதத்தின் பின்னர் 6.55 மணியளவில் கடுகதி ரயில் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது .

இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரயில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .






