வவுனியா பூவரசங்குளம் பகுதியில் 6 மாத யானைக்குட்டி மீட்பு!!

1816

6 மாத யானைக்குட்டி..

வவுனியா பூவரசங்குளம் வேலங்குளம் பகுதியில் தனிமையில் திரிந்த 6மாத யானைக்குட்டி ஒன்றினை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினர் மீட்டெடுத்துள்ளனர்

பூவரசங்குளம் வேலங்குளம் பகுதியில் நேற்றையதினம் (08.07.2020) மாலை கோவிலுக்கு சென்ற சிலர் கோவிலுக்கு அருகாமையில் பூப்பறிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதன் போது தனிமையில் நின்ற குறித்த யானைக்குட்டி அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளது. அதனையடுத்து அயலவர்கள் யானைக்குட்டியினை பாதுகாப்பாக வைத்திருந்ததுடன் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினர் அவ்விடத்தில் வேறு யானை நிற்கின்றதா என ஆராய்ந்த பின்னர் தனிமையில் நின்ற குட்டியானையினை மீட்டு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

ஆறு மாதமாகிய குறித்த குட்டியானை மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.