வவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 72 பேர் விடுவிப்பு!!

788

72 பேர் விடுவிப்பு..

வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 72 பேர் இன்று (09.07.2020) காலை விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்துவரப்பட்ட ஒரு தொகுதியினர் கடந்த 25 ஆம் திகதி வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர்.

இதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை குறித்த 72 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.