நொடி பொழுதில் நிகழ்ந்த இரு துயர சம்பவம் : பரிதாபமாக உ யிரிழந்த சிறுமிகள்!!

1640

கோவையில் நிகழ்ந்த..

இந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பிரதேசத்தை சேர்ந்தவர் அருள் ஞான ஜோதி. இவரது மகள் ஜெரலின் நேகா (வயது 9).

இவர் கயிற்று ஊஞ்சலில் துணியை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் , ஊஞ்சலின் துணி கழுத்தை இறுக்கிய நிலையில், சிறுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே மயங்கி காணப்பட்டுள்ளார்.

சிறுமியை உடனடியாக மீட்ட குடும்பத்தினர், அங்குள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாயார் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் நிலையில், இந்த சோகமானது ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை போன்றே கோவையில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. கோவையில் உள்ள ஒண்டிப்புதூர் சாமியார் மேடைப் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பவதாரணி (வயது 9).

சம்பவத்தன்று சிறுமி இரண்டு அடுக்கு கட்டிலில் இருந்து தனது வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருந்துள்ளார். அதன் போது சிறுமியின் பென்சில் தவறி கீழே விழுந்துள்ளது. பென்சிலை எடுக்க முயன்ற சிறுமி கட்டிலிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து, தலையில் அடிபட்டுள்ளது.

அவர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இதனை அடுத்து இந்த விடயம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த இரண்டு சிறுமிகளின் உயிரிழப்பு அம்மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.