த ற்கொ லை செய்து கொண்ட தமிழர் : 2 குழந்தைகளுடன் தவிக்கும் இளம் மனைவி!!

1130


2 குழந்தைகளுடன் தவிக்கும் இளம் மனைவி..



வெளிநாட்டில் பணிபுரிந்த தமிழர் அங்கே த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் மனைவி க ண்ணீருடன் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.



தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தின் அணைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வன் (38). இவருக்கு திருமணமாகி கவிதா (29) என்கிற மனைவியும், யோசிகா (9) என்கிற மகளும், அபிஷேக்(7) என்கிற மகனும் உள்ளனர்.




முத்தமிழ்ச்செல்வன் கடந்த 5 ஆண்டுகளாக ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள சார்ஜா மகாணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.


முத்தமிழ்ச்செல்வன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டு, மீண்டும் சார்ஜாவுக்கு திரும்பினார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாம்.

இதனால் ம னமுடைந்த அவர் கடந்த 3ம் திகதி தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார். க ணவர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் குறித்து தனியார் நிறுவனம் மூலம் மனைவி கவிதாவுக்கு தகவல் தெரியவந்த நிலையில் அவர் அ திர்ச்சியடைந்தார்.


அதனை தொடர்ந்து தற்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் வெளிநாட்டில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா கண்ணீர் மல்க நேற்று தனது 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.