ஒரே மேடையில் பெற்றோரின் சம்மதத்துடன் இரண்டு பெண்களை திருமணம் செய்த இளைஞன்!!

1665


இரண்டு பெண்களை திருமணம்..



இந்தியாவின் மத்தியபிரேதேசம் மாநிலத்தில் உள்ள பெட்டுல் மாவட்டத்தில் ஜிஹாரடோங்கிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் யுகே. இவர் அங்குள்ள போபால் ஹோஷங்காபாத் பகுதியில் படித்து வந்த போது, அவருக்கு அப்பகுதியில் உள்ள பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.



இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில், சந்தீப்பிற்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்த பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். நண்பர்களாக இருந்த இருவருக்கும் இந்த நட்பு தொடர வேண்டும் என்ற ஆவல், காதலாக மாறியுள்ளது.




இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் விழிபிதுங்கிய நிலையில், இவர்களின் காதல் திரைப்பட பாணியில் புரிவதற்குள், சந்தீப்பிற்கு பெற்றோர் வரன் பார்த்து திருமணத்தை பேசி முடித்துள்ளனர்.


இதன்பின்னர் சந்தீப் தனது தோழி குறித்து தனது காதல் பற்றி பெற்றோரிடம் கூறினார். இதனை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் மூன்று குடும்பமும் ஒன்று சேர்ந்து பேசி முடிவெடுத்து, சந்தீப்பிற்கு இரண்டு பெண்களையும் மணமுடிக்க தீர்மானித்துள்ளனர். இதற்கு இரண்டு பெண்மணிகளும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த 29 ஆம் திகதி அன்று இவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.


இதனை அடுத்து இந்த திருமண விவகாரம் ஜிஹாரடோங்கிரி கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இரண்டு திருமணம் முடிப்பது சட்டப்படி குற்றம் என்பதை அவர் குறிப்பிட்டுள்ள நிலையில்,அனைவரின் விருப்பத்துடனேயே இந்த திருமணம் நடைபெற்றது என்பதை கூற புதுமண ஜோடிகள் காவல் நிலையத்தில் காத்துகொண்டு உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.