வவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

1071


கொரோனா தொற்று..



வவுனியா பம்மைபடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (12.07.2020) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள் முடிவுகள் இரவு 8.30 மணிக்கு வெளியாகிய நிலையில் இக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



அந்த வகையில் வவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த 32 பேருக்கும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 55 பேருக்கும் என மொத்தமாக 87 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.




இதில் வவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை யாழ்ப்பான போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.