வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெயிலில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

1772

பொது வைத்தியசாலையில்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நோயாளர்கள் வெளிநோயார் பிரிவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்றையதினம் (13.07.2020) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வருகை தந்த நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் இருக்கைகள் இருக்கின்ற போதிலும் கடும் வெயிலுக்கு மத்தியில் வரிசையில் நின்று சேவைகளை பெற்றமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

தமக்கு சுகயீனம் என்பதினால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களை வைத்தியசாலை சமூகத்தினர் வெயிலுக்குள் வரிசையில் நிற்க வைத்திருந்தமை மனவேதனையளிக்கும் விடயமாகும்.

நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?