ஸ்ஸிலிருந்து விழுந்த..

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட முதியவர் கீழே வீழுந்து காயமடைந்து சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் மர ணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பகுதிக்கு அண்மையில் இடம்பெற்றது. குறித்த முதியவர் அன்றையதினம் (08.07.2020) வவுனியாவிலிருந்து பேருந்தில் பயணித்து நெடுங்கேணி பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது பேருந்தை நிறுத்தி இறங்கமுற்பட்டபோது தவறி கீழே விழுந்தநிலையில் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றய தினம் உ யிரிழந்துள்ளார். சம்பவத்தில் மதியாமடு பகுதியை சேர்ந்த கோபால் வயது 71 என்ற முதியவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





