முகக்கவசம்..

வவுனியாவில் முகக்கவசங்கள் அணியாமல் வீதிகளில் நடமாடுபவர்கள், உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் வாகனம் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முககவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராகவே பொலிஸார் நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெருக்கெடுக்க தொடங்கியுள்ளதை அடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் பொலிஸார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.





