விபத்து..

வவுனியா – கண்டி வீதியில் பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே இன்று (17.07.2020) இரவு 7.50 மணியளவில் மின்சாரசபை வாகனத்துடன் மீன் ஏற்றி வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கண்டி வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த இலங்கை மின்சார சபையின் வாகனம் இரண்டாம் குருக்குத்தெரு வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் கண்டி வீதியூடாக தென்பகுதி நோக்கி மீன் ஏற்றிச் சென்ற குளிரூட்டி வாகனம் மின்சாரசபையின் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மீன்களை ஏற்றி சென்ற குளிரூட்டி வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன் வாகனத்தின் சாரதிகள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






