வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபருடன் ஊடகவியலாளர் சந்திப்பு!!

851

பொலிஸ்மா அதிபருடன் ஊடகவியலாளர்..

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களுடன் வவுனியா – மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்று (21.07.2020) மாலை இடம்பெற்றது.

மக்களுடன் நெருக்கமாக பழகுபவர்கள் ஊடகவியலாளர்களே என்ற வகையில் வவுனியா மக்கள் எதிர் நோக்கும் விடயங்கள் வவுனியா , மன்னார் மாவட்டங்களில் பொலிஸாரால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

வவுனியா , மன்னார் மாவட்டத்தில் எடுக்கவேண்டிய பொறிமுறைகள் தொடர்பாகவும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை அவரச அழைப்பின்போது பொலிஸார் தாமதமாக குறித்த பகுதிக்கு வருகின்றமை மற்றும் வைரவபுளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் அதிவேகமான மோட்டார் சைக்கிள் செலுத்தப்படுகின்றமை எனவே குறித்த பகுதியில் பொலிஸ் காவலரணின் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன் போது எடுத்துக்கூறப்பட்டது.